தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி கடைநிலை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார் .

தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வருகிற 12-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி ஹவுசிங் போர்டு காலனி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி ஏற்பாட்டில் 3 வது வார்டு பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட மாநகராட்சி கடைகளில் ஊழியர்கள் 60 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி எட்டையபுரம் ரோடு ஹவுஸிங் போர்டு காலனி குடியிருப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி கடைநிலை ஊழியர்களுக்கு தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து பேசிய மேயர் ஜெகன் பெரியசாமி மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது மேலும் 130 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெரும் நிலையில் உள்ளது வருகிற ஜனவரி மாதம் முதல் பாதாள சாக்கடை மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், போல் பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர், மற்றும் ஜேஸ்பர், இளைஞரணி வேல்முருகன் திமுகழக மூத்த முன்னோடி மதியழகன் பார்த்திபன்,ராஜாமணி, உள்பட திமுகவினர் கலந்து கொண்டனர்.