எட்டையபுரம் பேரூராட்சியை கண்டித்து விரைவில் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் - அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் அறிவிப்பு.

எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
எட்டையபுரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் சாலை கால்வாய் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாகவும், குடிதண்ணீர் மூன்று வாரங்கள் ஆகியும் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருவதாகவும் கால்வாயில் தூர்வாராததால் கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருவதாகவும் சாலையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை பேவர் பிளாக் சாலை அமைத்திடவும் பேரூராட்சியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கொசுக்கடி மற்றும் சுகாதார சீர்கேடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் எட்டையபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும், தொடர்ந்து எட்டையபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கான அடிப்படை தேவை பணிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் பட்சத்தில், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆலோசனை பெற்று பொதுமக்களை திரட்டி அதிமுக சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.