தூத்துக்குடியில் அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட கட்டிடம் - அதிரடியாக அகற்றி கோட்டாட்சியர் நடவடிக்கை.

தூத்துக்குடியில் அரசு புறம்போக்கில் கட்டப்பட்ட கட்டிடம் -  அதிரடியாக அகற்றி கோட்டாட்சியர் நடவடிக்கை.

தூத்துக்குடி அரசு புறம்போக்கு நிலத்தில் மாப்பிள்ளையூரணி கிராமத்தை சேர்ந்த செல்லச்சாமி மகன் சிவக்குமார் என்பவர் அரசின் அனுமதி பெறாமல் கட்டிடம் வந்துள்ளார்.

 அரசு புறம்போக்கில் எந்தவித அனுமதியும் பெறாமல் கட்டிடம் கட்டி வந்த சிவகுமாரின் கட்டிடத்தை தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவின் பேரில், தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் தலைமையில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுப்பையா, வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன் மற்றும் தாளமுத்து நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்த 2 சென்ட் கட்டிடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.