திருநெல்வேலி மானூரில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி - எம் சி. சண்முகையா எம் எல் ஏ துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மானூரில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் 102 பிறந்த நாளை முன்னிட்டு மின்னொளி கைப்பந்து போட்டி - எம் சி. சண்முகையா எம் எல் ஏ துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட மானூர் கிழக்கு ஒன்றிய கழக திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்  102 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கைப்பந்து போட்டி துறையூர் சாரல் மைதானத்தில் வைத்து இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

மாநில அளவிலான கைப்பந்து துவக்க விழா நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம் சி. சண்முகையா கலந்து கொண்டு முதல் போட்டியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.க. மணி, மாலைராஜா, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கிட்டு (எ) ராமகிருஷ்ணன், தென்காசி முன்னாள் மாவட்ட கழக செயலாளர் துரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் .பரமசிவ அய்யப்பன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாவட்ட விவசாய அணி வே.செண்டு, அரசு வழக்கறிஞர் கந்தசாமி,சிந்து கணேசன், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, அணவை கீர்த்தி, மற்றம் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.