தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி பள்ளிகளில் அமைச்சர் கீதா ஜீவன் திடிர் ஆய்வு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் இரண்டாம் கட்டமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்த நிலையில் இன்று ஜின்பேக்டரி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தெற்கு புதுதெருவில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி பரிமாறினார்.
மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது;
இரண்டாம் கட்டமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் காலை சிற்றுண்டியை சில தினங்களுக்கு முன்பு துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 79 பள்ளிகளில் 5580 மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 18 பள்ளிகளில் 2636 மாணவ மாணவியருக்கும் விளாத்திகுளத்தில் 56 அரசு பள்ளிகளில் 2350 மாணவ மாணவிகளுக்கும் கோவில்பட்டியில் 5 முனிசிபல் பள்ளிகளில் 594 மாணவ மாணவிகளுக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக மாநில முழுவதும் 1978 பள்ளிகளில் 160098 பள்ளி மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது மேலும் இத்திட்டமானது தொடர்ச்சியாக கூடுதலாக்கப்படும் இந்த திட்டமானது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளின் வருகை பதிவேடு அதிகரித்துள்ளது கற்றல் திறனும் அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்