1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடி நடவடிக்கை.

1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் ஆட்சியர் செந்தில்ராஜ் அதிரடி நடவடிக்கை.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் , பாலில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து இன்று ( 06.03.2023 ) ஆய்வு மேற்கொண்டார்

ஆய்வு போய்கொண்டு அவர் தெரிவித்ததாவது : பாலில் கலப்படம் செய்வது , தண்ணீர் கலப்பது குற்றம் பாலில் கலப்படம் செய்வதற்காக பவுடர் உள்ளிட்டவற்றை கலப்பது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது . அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் , கலப்படம் இல்லாத பால் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

உணவு பாதுகாப்புத்துறை ,பால் வளத்துறை ,தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல் துறை , மாநகராட்சி இணைந்து மாநகராட்சி பகுதியில் கலப்படம் இல்லாத பால் மக்களுக்கு கிடைப்பதற்காகவும் , கலப்படம் செய்யப்பட்ட பாலை பறிமுதல் செய்வதற்காகவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பழைய பேருந்து நிலையம் , புதிய பேருந்து நிலையம் , அமெரிக்கன் மருத்துவமனை பகுதிகளில் பாலின் தரம் குறித்து கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை செய்து 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அதுபோல அளவீடு கருவிகளும் முறையாக இல்லை . 500 மில்லி லிட்டர் என்றால் 450 மில்லிலிட்டர் தான் இருக்கிறது. 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தரமான பால் சரியான அளவில் சென்றடைவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இந்த நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் , தெரிவித்தார் . 

ஆய்வின்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார்,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.