குடிநீர் வினியோகம் நிறுத்தம் களத்தில் இறங்கிய மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்தி!

தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு பகுதியில் ஜே ஜே நகர் ,காமாட்சி நகர் ,திரு வி க நகர் தெரு ஆகிய 4 பகுதியில் சுமார் 5 நாட்களாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.
குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.
உடனடியாக களத்தில் இறங்கிய 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சி அதிமுக கொறடாவுமான மந்திரமூர்த்தி மாநகராட்சி அதிகாரியிடம் தொடர்பு கொண்டு குடிநீர் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர் எனவே குடிநீர்வினியோகம் செய்யும் பணியை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும் திரு வி க நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர் மந்திர மூர்த்தியின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்து தற்போது அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்தார்.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை உடனடியாக சரி செய்து கொடுத்த மாமன்ற உறுப்பினர் மந்திரமூர்த்திக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.