கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாமில் எம்எல்ஏ மார்கண்டேயன் பங்கேற்பு!

விளாத்திகுளம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வீரபாண்டியபுரத்தில்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட அனைத்து துறைகளுக்கான சிறப்பு முகாமில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்தும் கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக விஜயன்,வேளாண் உதவி இயக்குனர் கீதா,உதவி வேளாண் அலுவலர் சுரேஷ்,கால்நடை மருத்துவர் ராகுல்,கால்நடை ஆய்வாளர் சுசிலா,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,ஊராட்சி மன்ற தலைவர் லக்கம்மாள் மாணிக்கம்,மாவட்ட கவுன்சிலர் நடராஜன்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா,ஆதிசங்கர் வார்டு செயலாளர் லெனின்,கிளைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சென்றாய பெருமாள்,ஆதிலிங்கம், முருகன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.