ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிப்பு மோடி அரசை கண்டித்து புதியம்புத்தூரில் கண்டனப் பொதுக்கூட்டம் - திருப்பரங்குன்றம் எனக்கா? உனக்கா? என சாதி மத மோதலை தூண்ட நினைக்கும் உங்கள் கனவு பலிக்காது அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேச்சு.

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிப்பு மோடி அரசை கண்டித்து புதியம்புத்தூரில் கண்டனப் பொதுக்கூட்டம் - திருப்பரங்குன்றம் எனக்கா? உனக்கா? என சாதி மத  மோதலை தூண்ட நினைக்கும் உங்கள் கனவு பலிக்காது அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் பேச்சு.

ஒன்றிய பாஜக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யவில்லை தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசின் இந்த செயலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக மாநகரங்களில் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெடை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திட திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புதியம்புத்தூர் பஜாரில் வைத்து ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெடை கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான சண்முகையா தலைமையில் 

 தூத்துக்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சரவணக்குமார்,அன்னை இந்திரா நகர் பகுதிச் செயலாளர் சிவக்குமார், தூத்துக்குடி மேற்கு ஒன்றியச் செயலாளர் புதூர் சுப்பிரமணியன்,கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி,ஸ்பிக்நகர் பகுதிச் செயலாளர் ஆஸ்கர்,கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்காந்தி,ஓட்டப்பிடாரம் ஒன்றியம் முன்னாள் சேர்மன் ரமேஷ், ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையராஜா கூட்டத்திற்கு வந்தவர்களை வரவேற்று பேசினார்.

இதில் தலைமை கழகப் பேச்சாளர்கள் அத்திப்பட்டு சாம்ராஜ்,சிங்கை பிரபாகரன் ஆகியோர் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட் பற்றி தொடர்ந்து வஞ்சித்து வருவதைப் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக பேசினர்.

மீன்வளம், மீனவர் நலன் (ம) கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில்;

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது அந்த பட்ஜெட் தாக்கல் செய்யும் முன்பு திருக்குறளை வாசித்து விட்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை மறந்து விட்டனர் சென்னை மெட்ரோ, கோயமுத்தூர் மெட்ரோ ஆகிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம் அதுபோன்று கடந்த ஆட்சி காலத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்திற்காவது நிதி ஒதுக்கீடு செய்வார்கள் என்று பார்த்து கொண்டு இருந்தோம் எதுவும் நடக்கவில்லை அதற்கு மாறாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு நிதியை கொடுத்தது இந்த முறை பீகார் மாநிலத்திற்கு தேர்தல் வருவதால் தேர்தலை கணக்கில் கொண்டு பட்ஜெட்டில் நிதியை அள்ளி கொடுக்கிறது சாதி மத வேறுபாடின்றி தமிழக மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையில் திருப்பரங்குன்றம் உனக்காக இல்லை எனக்கா என சாதி மத மோதலை உருவாக்க முற்றி செய்கிறது அது தமிழகத்தில் நடக்காது இது பெரியார் மண் ,அண்ணாவின் மண் எந்த கொம்பனாலும் இங்கு ஒன்றும் செய்து விட முடியாது .

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டில் எங்கே ஒரு பெண்ணிற்கு ஏதோ ஒன்று நடந்து விட்டாலும் எங்கே ஒரு பள்ளியில் ஏதோ ஒரு தவறு நடந்து விட்டாலும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அரசியல் செய்கிறார் ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்க பட்டு இருப்பது பற்றி ஒன்றிய அரசுக்கு எதிராக எந்த கண்டனத்தையும் அவர் ஏன் பதிவு செய்யவில்லை.

நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் மண்ணில் திமுகவை  எதிர்த்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி டெபாசிட்  இழக்க செய்து இருகிறது இதே நிலைதான் 2026 இல் அனைத்துக் கட்சிக்கும் ஏற்படும்.

தொடர்ந்து பேசுகையில் நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை தந்த கதாநாயகன் மு க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி உள்ளார் அதில் குறிப்பாக மகளிர் உரிமை தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம்,காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் எனவும் நமது மாவட்டத்திற்கு வின் பாஸ்ட் கார் தொழிற்சாலை, புதியம்புத்தூரில் ஜவுளி பூங்கா, என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் நம் முதல்வர் எனவே வருகிற 2026 ல் நம் முதல்வர் 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்று சொல்லிய நிலையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்றி 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற்ற செய்திட வேண்டும் என பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா ஏற்பாட்டில் மூன்று கிரிக்கெட் அணியினருக்கு ஜெர்சி ஆடைகளை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கழக வர்த்தகரணி இணை செயலாளர் உமரிஷங்கர்,கழக மருத்துவரணி துணை செயலாளர் வெற்றிவேல்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி,டேவிட்செல்வின்,மாடசாமி,தலைமைக் கழக வழக்கறிஞர் மனோஜ்,மகளிரணி பிரச்சாரக்குழு செயலாளர் ஜெஸி பொன்ராணி, ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் டி டி சி ராஜேந்திரன்,தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் பகுதிகழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், பேரூர் கிளை கழக செயலாளர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.