தருவைகுளத்தில் மணீப்பூா் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து பேரணி மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருவைகுளத்தில் மணீப்பூா் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை  கண்டித்து   பேரணி  மற்றும்  ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் வான் படைகளின் தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தில் இருந்து 06/08/23 இன்று கொடிமர வீதி, குருசடி வீதி, பேருந்து நிலையம் மற்றும் கெபி வீதி வழியாக மீண்டும் ஆலயத்திற்கு பேரணியாக வந்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்விற்கு அருட்பணி சஜன் தலைமையில் உதவி பங்கு தந்தை, அருட்பணி வின்சென்ட் பங்குதந்தை முன்னிலையிலும் நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் ஊர் நிர்வாகி மகாராஜன், தூத்துக்குடி மறைமாவட்ட பல்நோக்கு பணியக செயலர் சசிகலா மற்றும் ஆலய பங்கு இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.