தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதி சபா கூட்டம் - கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு பகுதி சபா கூட்டம் 3 வது வார்டுக்கு உட்பட்ட எஸ் எம் டி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் வைத்து 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
தங்களது பகுதிக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டு விரைவில் உங்கள் கோரிக்கையில் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என கவுன்சிலர் ரெங்கசாமி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாநகராட்சி வருவாய் உதவியாளர் விக்னேஷ் மணி வட்டச் செயலாளர் தெய் வேந்திரன், பகுதி சபா உறுப்பினர்கள் செல்வராஜ்,ஜவகர், தொமுச சண்முகையா, ராஜாமணி,பால்ராஜ், கட்சியின் மூத்த முன்னோடிகள் நிர்வாகிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.