மழை இல்லை மின்சாரமும் இல்லை எப்போதும்வென்றான் சுற்று வட்டார பகுதி மக்கள் அவதி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி எப்போதுவென்றான் சுற்றுவட்டார கிராமங்களாகிய காட்டுநாயக்கன்பட்டி ஆதனூர் மிளகு நத்தம் ஆகிய பகுதிகளில் பல மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மின்சாரம் வழங்கி பொதுமக்கள் சிரமத்தை குறைத்திட அப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் கொடுத்துள்ளனர்.