திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

அமலிநகர் மீனவர் போராட்டம் 2500 மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

திருச்செந்தூர் அமலிநகர் மீவை கிராமத்தில் தூண்டில் பாலம் அமைக்க அரசு மானிய கோரிக்கையில் தூண்டும் பாலம் அமைக்க ரூபாய் 83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு ஆகியும் தூண்டில் பாலம் அமைப்பதற்குரிய பணிகள் ஏதும் நடைபெறதா காரணத்தால் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி அரசை வலியுறித்தி கடந்த 20.2.23 அன்று திடீரென ஊர் கமிட்டி மற்றும் மீனவ கூட்டுறவு சங்கம், ஊர் பொதுமக்கள் சார்பில் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தினர். முதல்நாள் போராட்டமாக படகுகளில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

இரண்டாம் நாள் போராட்டமாக கடலில் இறங்கி மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர். மூன்றாம் நாள் போராட்டமாக  ஊர் மக்கள் 2500 பேர் அமலி அன்னை பேராலயம் பின்புறம் ஒன்றுகூடி கோஷம் போட்டு அரசுக்கு தெரியபடுத்தும் வகையில் போராடினார்கள். சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 2500 மீனவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் எங்கள் ஊரில் தூண்டில் பாலம் அமையும் வரை எங்களது போராட்டம் தொடரும் அருகில் உள்ள மீனவ கிராமமான மணப்பாடு, ஆலந்தலை, வீரபாண்டிபட்டிணம் உள்பட பல்வேறு கிராமத்தில் தூண்டில் பாலம் அமைத்து உள்ளது. ஏன் எங்கள் ஊரில் தூண்டில் பாலம் அமைக்கவில்லை. தூண்டில் பாலம் அமையும் வரை கடைசிவரை போராடுவோம் என மீனவ மக்கள் உறுதியாக உள்ளனர்.

திருச்செந்தூர் அமலி நகர் மீனவ கிராமத்தில் மூன்றாவது நாளாக கோவில் பின்புறம் உள்ள பங்குத்தந்தை பங்களா முன்பு ஊர் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்கள் ஊர்நலக் கமிட்டித் தலைவர் பாஸ்கர் பர்னாந்து , மீவை கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமையில் ஊர் கமிட்டி செயலாளர் அந்தோனி, பெருளாளர் குளோரியான், உறுப்பினர்கள் பெலிக்ஸ், பெளலின், இருதயராஜ், ஸ்டீனர்,நேவில், ராஜா, கெருடஸ், ராஜன், சந்தியாகு, கோல்பே, சுதாகர், சிலுவை பிச்சை, பவுலின், ஜுனர் லையோ, பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் அமலிநகர் மீனவ மக்கள் ஆண்களும் பெண்களும் 2500 கலந்துகொண்டனர்.

தூண்டில் பாலம் அமைக்கக்கோரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.