திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கக் கோரி மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

திருச்செந்தூர் அமலி நகர் மீனவ கிராமத்தில் மூன்றாவது நாளாக கோவில் பின்புறம் உள்ள பங்குத்தந்தை பங்களா முன்பு ஊர் மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர்கள் ஊர்நலக் கமிட்டித் தலைவர் பாஸ்கர் பர்னாந்து , மீவை கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமையில் ஊர் கமிட்டி செயலாளர் அந்தோனி, பெருளாளர் குளோரியான், உறுப்பினர்கள் பெலிக்ஸ், பெளலின், இருதயராஜ், ஸ்டீனர்,நேவில், ராஜா, கெருடஸ், ராஜன், சந்தியாகு, கோல்பே, சுதாகர், சிலுவை பிச்சை, பவுலின், ஜுனர் லையோ, பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் அமலிநகர் மீனவ மக்கள் ஆண்களும் பெண்களும் 2500 கலந்துகொண்டனர்.
தூண்டில் பாலம் அமைக்கக்கோரி அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.