எட்டையபுரத்தில் உமறுபுலவர் பிறந்தநாள் விழா - அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமுதாகவி உமறுபுலவர் சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழ் அறிஞர் அமுதகவிக்கு 382 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் பிறந்த நாள் விழாவிற்கு அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அமுதகவி உமறுபுலவர்ருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக எட்டையபுரம் நகர அவை தலைவர் கணபதி கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிர் அணியினர் செல்வி, சாந்தி, கழக நிர்வாகி வேலுச்சாமி, மோகன், மணிகண்டன் ஜமாத் தலைவர் காஜா மைதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.