தமிழ்நாடு முதல்வரால் பெண் சிங்கம் என்று அழைக்கப்படும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிறந்தநாள் - பிரையன்ட் நகர் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கேக் வெட்டியும் மரக்கன்று வழங்கியும் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதல்வரால் பெண் சிங்கம் என்று அழைக்கப்படும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பிறந்தநாள் - பிரையன்ட் நகர் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கேக் வெட்டியும் மரக்கன்று வழங்கியும் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் பெண் சிங்கம் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், பிறந்தநாளை முன்னிட்டு 06.05.25 இன்று தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டு திருச்செந்தூர் ரோடு - பழைய கலெக்டர் ஆபிஸ் முன்பு, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி,

 தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன் ஏற்பாட்டில், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், 48 வது வட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலர் நவநீதன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை முன்னிலையில். பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், உப்பள தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி, 155 மரக்கன்றுகளை வழங்கி அமைச்சர் கீதா ஜீவனின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் 48 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், வட்ட செயலாளர் சிங்கராஜ், வட்ட பிரதிநிதிகள் சுடலைமணி, ரஜினி முருகன், பாலம் ஈஸ்வரன், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், உமா மகேஷ், பகுதி பிரதிநிதி செல்வம், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பிக்கப் தனபால், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கி துரை, விவசாய அணி அமைப்பாளர் பெரிய நாயகம், பொறியாளர் அணி அமைப்பாளர் லிங்கராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன், விசிக செய்தி தொடர்பாளர் செல்வகுமார், திமுக நிர்வாகிகள் முருகானந்தம், இளைஞரணி மாரிமுத்து, சுதாகர், முருகானந்தம், எஸ்.கே.மோகன் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.