மே தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

மே தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைப்படி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் ஓணமாக்குளம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் வட்டாட்சியர் சுந்தரராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன், வட்டார கல்வி அலுவலர் பவநந்தீஸ்வரன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து,வருவாய் ஆய்வாளர் துரைராஜ்,கிராம நிர்வாக அலுவலர் குருநாதன்,பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன்,ஒன்றிய அவைத்தலைவர் ராஜேந்திரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள்,துணை தலைவர் ரத்தினபாண்டி,ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.