தருவைக்குளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தருவைக்குளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் சண்முகையா எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதல்வர் மு க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தருவைக்குளம், மேல அரசடி மற்றும் கீழ அரசடி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தருவைக்குளம் தூய கேத்ரின் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு துறை சார்ந்த அதிகாரியிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

மற்றும் முகாமில் பயனாளிகளுக்கு வருவாய்த் துறையின் மூலம் வீட்டுமனை பட்டா , வீடுகளை பழுது நீக்குவதற்கான ஆணைகள் மற்றும் வேளாண்மை துறையின் மூலம் தார்ப்பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

இம்முகாமில் வட்டாட்சியர்கள் ஆனந்த் செல்வகுமார் சுசிலா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர்கள் மாரிமுத்து பிரசாத் ராஜா மாவட்ட கவுன்சிலர் மிச்கேல் நவமணி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி ஊராட்சி மன்ற தலைவர்கள் கடோடி வேல்கனி கிளை செயலாளர் ராபின் கிளை பிரதிநிதி பிரஸ்நேவ்  மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.