சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா

சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பில் தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார் தாளாளர் ராஜேஷ் தமிழரின் பாரம்பரியத்தை பற்றி கல்லூரி மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீருவைகுண்டம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பி.ஜி.ரவி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் ஜெபதங்கம் சாயர்புரம் பேரூராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பொன்சேகர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்களது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு பாரம்பரிய உடையை அணிந்து சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் பாஸ்ட்ரேட் செயலாளர் அபிஷேகம் சாயர்புரம் பாஸ்பேட் பொருளாளர் ஜான்சன் ரபேல் மருத்துவமனை மேலாளர் ஷாம் கல்லூரி சிறப்பு பொறியாளர் தீபக்ராஜ் கல்லூரி துறை தலைவர்கள் பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.