தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் விழா - கவுன்சிலர் ரெங்கசாமி பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை சென்னையில் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு நியாய விலை கடையில் சர்க்கரை, பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி, சேலை, ஆகியவையுடன் கூடிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் தெய்வேந்திரன் செல்வராஜ் சண்முகையா ராஜாமணி ராஜசேகர் சங்கரநாராயணன் முத்துராஜ் சங்கர சுப்பிரமணியன் கே டி சி பால்ராஜ் நியாய விலைக் கடை அலுவலர் மனோகரன் மற்றும் கழக முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர்.