தூத்துக்குடி கட்டபொம்மன் நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி மதிமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோரிக்கை மனு .

தூத்துக்குடி மதிமுக மாநகர செயளாலர் முருகபூபதி தலைமையில் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது.
கோரிக்கை மனுவில்;தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரையண்ட் நகர் பகுதியான 12 மேற்கு, 45வது வார்டு, கட்டபொம்மன் நகர், நான்கு முக்கு சந்திப்பில் தினமும், தனியார் கம்பெனி பஸ்கள், மினி பஸ், ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் என போக்குவரத்து இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பல்வேறு சாலையை கடப்பதற்கு போதிய விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி ம.தி.மு.க வின் முக்கியமான கோரிக்கையான உயிர் மின்கோபுர விளக்கு வசதியை கட்டபொம்மன் நகர், 12, நான்கு முக்கு சந்திப்பில் அமைத்து தரும்படியும்.
கட்டபொம்மன் நகர், நான்கு முக்கு சந்திப்பில் குடி தண்ணீர் தொட்டியின் மூடியை நல்ல முறையில் அமைத்து தரும்படியும்,
புதிய தார்சாலை போடப்பட்ட சாலையின் இரு புறங்களிலும் சரல் மணல் அடித்து தரும்படியும்.
கட்டபொம்மன் நகர் 12 மேற்க்கு பகுதியில் மழை நீர் வடிகால் பணிகளை அமைத்து தர வேண்டியும்.
பிரைநகர் 11வது தெரு பகுதியில் புதிய தார்சாலை வசிதி இல்லாமல் உள்ளது பொதுமக்களின் நலன் கருதி 11வது தெரு மேற்கில் இருந்து கிழக்கு பகுதி வரை புதிய தார்சாலை அமைத்து தரவேண்டியும்.
மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் பொது மக்களின் நலன் கருதி உடனடியாக செய்து தரும்படி தூத்துக்குடி மாநகர மதிமுக சார்பில் கோரிக்கை மனுவினை மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கினார்.
இதில்