ஒட்டப்பிடாரம் சங்கம்பட்டி பெரியகுளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம்  சங்கம்பட்டி பெரியகுளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை  ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தொடங்கி வைத்தார்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையில் பெரியகுளம் நிரம்பி குளத்தின் கரை முற்றிலுமாக உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்து அதிகமான பாதிப்புகளை உண்டாக்கியது. 

இதனையடுத்து பெரியகுளத்தின் கரையை சீரமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கோரிக்கை வைத்திருந்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35 லட்சம் மதிப்பீட்டில் பெரியகுளத்தின் கரையை பலப்படுத்தி தடுப்பணை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் தரமேஷ் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி உதவி பொறியாளர் பால நமச்சிவாயம் பணி மேற்பார்வையாளர் ஶ்ரீநிதிஊராட்சி மன்ற தலைவர்கள் கணேசன்,அருண்குமார் ஊராட்சி செயலர் அனிதாஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன்மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.