அண்ணாவின் 54 வது நினைவு தினம்; மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை!

தூத்துக்குடியில் அறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் சாலை காமராஜ் காய்கனி மார்க்கெட் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திரு உருவ சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர தலைவர் ஆனந்த சேகரன்,மண்டலத் தலைவர் பாலகுருசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சரவணகுமார்,பொன்னப்பன், இசக்கிராஜா,முத்துவேல், கீதா முருகேசன், முன்னாள் பகுதி செயலாளர் ரவீந்திரன்,முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,மகேஸ்வர சிங், பொன்ராஜ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.