வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக்கூட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலையிலும் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்  முன்னிலையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த ஆண்டு பருவமழையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்ப்படாத வண்ணம் அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளும் விரைந்து செயல்படுமாறு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த் யூனியன் ஆணையாளர் வசந்தா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி மற்றும் மின்சாரத்துறை,சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.