ஓட்டப்பிடாரத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி - யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் ஏற்பு.

ஓட்டப்பிடாரத்தில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி -  யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் ஏற்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் ஆணைப்படி தமிழ்நாடு அரசின் மது விலக்கு மற்றும் ஆயத்ததீர்வை துறையின் மூலம் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடுஎன்ற தலைப்பில் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் யூனியன் ஆணையாளர் வசந்தா மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா துரைராஜ் இமாம் பணி மேற்பார்வையாளர்கள் பரமசிவன் சங்கர் ஶ்ரீநிதி ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார் கணேசன் காடோடி வள்ளியம்மாள் ரவி சரிதா மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.