அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி - மக்கள் பயன்பாட்டிற்கு சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

அயிரவன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி - மக்கள் பயன்பாட்டிற்கு சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் இளவேலங்கால் ஊராட்சி அயிரவன்பட்டி கிராமத்தில் _சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 3.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 10000 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைதள நீர்த்தேக்கத் தொட்டியை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வருவாய் ஆய்வாளர் துரைசாமி ஊராட்சி மன்ற தலைவர்கள் சாவித்திரி அருண்குமார் ஊராட்சி செயலர் ராஜு அரசு ஒப்பந்ததாரர்கள் முஹம்மத் ஜோசப் இளைஞரணி மணிகண்டன் சரவணகுமார் அலெக்ஸ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.