தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 8 வது ஆண்டு மகளிர் தின விழா - கவுன்சிலர் ரெங்கசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 8 வது ஆண்டு மகளிர் தின விழா - கவுன்சிலர் ரெங்கசாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேவா கல்வி மற்றும் சமூக நலக் கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபாஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து எட்டாவது ஆண்டு மகளிர் தின விழாவை நடத்தியது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் சாந்தி கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு சாதனை மகளிர் விருது வழங்கி மகளிர் தின சிறப்புரை ஆற்றினார்கள். 

சேவா கல்வி மற்றும் சமூக நல கட்டளை நிறுவனர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற செயலாளர் காமாட்சி முருகன் வரவேற்று பேசினார். அரிமா சுரேஷ் தங்க ராயப்பன் அரிமா ஐலின் சுஜி சுரேஷ் தங்க ராயப்பன் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கி தலைவர் உரை ஆற்றினார். 

தமிழ்நாடு HMS உழைப்பாளர் சங்க தலைவர் டாக்டர் ராஜலட்சுமி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் ஐலின் சைபர் குற்றங்கள் குறித்து உரையாற்றி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். 

சாதனை மகளிர்க்கான விருது பெற்றவர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியை கோமதி நடராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர் விஜயலட்சுமி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, மருத்துவ உதவியாளர் லட்சுமி, நீதிமன்ற எழுத்தர் சுப்புலட்சுமி, ஆசிரியை சீரின், உதவி பேராசிரியர் ஸ்ரீவித்யா, சுயதொழில் புரியும் பெண் தொழிலதிபர் கலா, தொழிலதிபர் அன்ன புஷ்பம், இல்லம் தேடி மருத்துவத்தில் பணிபுரியும் பிசியோதெரபிஸ்ட் காயத்ரி, திருமறை ஆசிரியர் செண்பகவல்லி, போக்குவரத்து காவலர் பரமேஸ்வரி ஆகியோருக்கு சாதனை மகளிர் விருதினை ஆய்வாளர் சாந்தி வழங்கினார்கள். 

மூன்றாவது வார்டு சுகாதார மேற்பார்வையாளர் விநாயகம், மின்சார வாரியத்தில் பணியாற்றும் மாசான முத்து, கட்டி செல்வம், மாநகராட்சி குடிநீர் திறப்பவர் காசி குமார் சிறந்த சமூக சேவை செய்து வரும் ராதா மற்றும் கணேசன் ஆகியோருக்கு சேவா சமூக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கும் மகளிருக்கும் வாழ்த்துரை வழங்கியவர்கள் 3 வது வார்டு வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி, ஸ்ரீ நலம் தரும் விநாயகர் ஆலய தலைவர் நவநீதகிருஷ்ணன், சாயர்புரம் போப் கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன், ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் முருகன், தமிழ்நாடு உழைப்பாளர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் முனைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அஸ்ட்ரானமி மன்ற மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஸ்ரீ நலம் தரும் விநாயகர் ஆலய துணை செயலாளர் ரெங்கா, பொருளாளர் சரவணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில் கவிஞர் நெடுஞ்சாலை செல்வராஜ் எழுதிய தென்றல் கவிதை புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தை சைபர் கிரைம் ஆய்வாளர் சாந்தி வெளியிட சாய்ராம் போப் கல்லூரி பேராசிரியர் முனைவர் தினகரன் பெற்றுக்கொண்டார். முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர்க்கு அரிமா சுரேஷ் தங்க ராயப்பன் அரிமா ஐலின் சுஜி சுரேஷ் தங்க ராயப்பன் பரிசுகளை வழங்கினார்கள். 

விழாவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்ற தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் காலனி வாள் பொதுமக்கள் குழந்தைகள் அனைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். நிறைவாக ஆசிரியை தேவி அவர்கள் நன்றி கூறினார்கள். 

விழா ஏற்பாட்டினை சேவா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிர் நல மன்றம் சுபா ஸ்ரீ சேவா மகளிர் சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.