தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிகளில் புதிதாக சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா- அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிகளில் புதிதாக   சிசிடிவி கேமரா திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா-  அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி 49 வது வார்டு பகுதிகளில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்று வட்ட செயலாளர் மூக்கையா மற்றும் கவுன்சிலர் வைதேகி ஆகியோர் கோரிக்கை வைத்து இருந்த நிலையில் இன்று அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு கருதி புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை திறந்து வைக்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

நிகழ்ச்சியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார், சுப்புலட்சுமி, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.