தூத்துக்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி பெல் ஹோட்டல் முன்பு இருந்து தொடங்கி மீன்பிடி துறைமுகம், இனிகோ நகர், ரோச் பூங்கா, படகு குழாம் வரை 4 கீ.மி தூரம் சென்று மீண்டும் அதே வழியில் திரும்பி பனிமய மாதா ஆலயம் முன்புறம் முடியும் நடைப்பயிற்சி நடைபாதையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமையில் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் எட்டு கிலோமீட்டர் தூர நடை பயிற்சியை மேற்கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் சுகாதாரத்துறை இணை இயக்குனர் பொற்செல்வன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் மீனவர்கள் மாலத்தீவு நாட்டில் சிறைபிடிக்கப்பட்ட உடனே ஒன்றிய அரசுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை மீட்க வலியுறுத்தினார் தற்போதும் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் படகை விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளர் இதுபோல் இலங்கையில் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களையும் அவர்கள் படகுடன் சேர்ந்து விடுவிக்க உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுத்து வருகிறார் என தெரிவித்தார்.