தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே மாற்றுத்திறனாளி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமாக காட்சியளிக்கிறது இதனால் இந்த அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருவதால் மிகுந்த சிரமம் அடைவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட செயலாளர் K.S.ராகவேந்திரா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.