பொது உறுப்பினர் கூட்டம் - அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

பொது உறுப்பினர் கூட்டம் - அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

பொது உறுப்பினர் கூட்டம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 24ம் தேதி யான இன்று கலைஞர் அரங்கத்தில் கூட்டத்திற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்கழகச் செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள், கழக செயல் வீரா்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : -

1. ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழகத்திற்கு எந்தவித நிதியும் கொடுக்காமல் வஞ்சித்தபோதும், தமிழகம் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உயரிய நோக்கோடு முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருபவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் பெருகி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி, மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் மிக்க நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. 

2. கடந்த (16.08.2024) அன்று கழகத் தலைவர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதிக் கழகங்கள் தோறும் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவது எனவும் அதற்கான தேதி மற்றும் கூட்டம் நடைபெறும் இடம் பட்டியலில் உள்ளவாறு அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து கழக சார்பு அணிகள், வார்டு கழகங்கள் மற்றும் கிளைக்கழகங்கள் வாரியாக செயல்வீரர்கள் கூட்டங்கள் நடத்திட தீர்மானிக்கப்படுகிறது.

3. தி.மு.கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கழகத்தின் முப்பெரும்விழா வருகிற செப் -17 அன்று சென்னையில் நடைபெறும் என்று கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளர்கள். கழக தலைவரின் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழாவில் சிறப்பாக பங்கேற்பது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது. 

4. இந்திய தேர்தல் ஆணையம் (01.01.2025) ஐ தகுதி நாளாக வைத்து வாக்காளர் பட்டியலை திருத்தம் மேற்கொள்ள அறிவித்துள்ளது. அதன்படி (20.08.2024) முதல் (18.10.2024) வரை வாக்குச் சாவடி நிலை அலுவலர் ( BLO - 1 ) ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க உள்ளார்கள். மேலும் (01.10.2024) அன்று 18 வயது பூர்த்தியடைந்த தகுதியானவர்களை புதிய வாக்காளர்களாக சேர்த்திடவும், எதிர்காலத்தில் (01.04.2025), (01.10.2025) ஆகிய தேதிகளில் வாக்காளராக சேர தகுதியானவர்களை கண்டறியவும், இறந்த வாக்காளர்கள், பல முறை பதிவு, மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் விபரங்களை சரிபார்த்திட இருக்கிறார்கள். எனவே தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ( BLA - 2 ) வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் வேலையை உடனடியாக செய்து இறப்பு, பல முறை பதிவு, நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அலுவலரிடம் தெரிவித்திட கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். 

5. அண்மையில் நடைபெற்ற கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது முழு வெற்றி பெற்றது போல் 2025 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு உழைத்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது . இதனை துண்டு பிரசுரங்கள் , திண்ணைப் பிரச்சாரங்கள் , தெரு முனை கூட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சென்றிட கழக நிர்வாகிகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது . 

6. தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்காக தூத்துக்குடியில் 990 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 14000 கோடி முதலீட்டில் "வின்பாஸ்ட்" கார் தொழிற்சாலை, விளாத்திக்குளத்தில் தொழிற்பேட்டை , கடம்பூரில் சிப்காட் தொழிற்பேட்டை என பல திட்டங்களை தந்த கழக தலைவர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது 36,000 கோடி மதிப்பில் பசுமை நைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி செய்யும் "செம்கார்ப்" தொழிற்சாலைக்கு (21.08.2024) அன்று அடிக்கல் நாட்டியுள்ளார்கள். வடக்கு மாவட்ட திமுக கழகம் இதற்காக தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் மிக்க நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பொருளாளர் சுசி. ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கழுகுமலை சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், மேகநாதன், சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரி தங்கம், ஒன்றிய செயலாளர்கள் சின்ன பாண்டியன் சின்ன மாரிமுத்து நவநீத கண்ணன் மும்மூர்த்தி செல்வராஜ் ராமசாமி முருகேசன் ராதாகிருஷ்ணன்,பேரூர் செயலாளர்கள் கிருஷ்ணகுமார், சுரேஷ் கண்ணன், மருதுபாண்டி, வேலுச்சாமி, பாரதி கணேசன்,மற்றும் மாநகர துணை செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.