தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு இன்று மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ந்தேதி போராட்டம் கலவரமாக மாறியது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
அதனை அனுசரிக்கும் விதமாக தூத்துக்குடி பண்டாரம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அவர்களது திருவுருவ படத்திற்கு மக்கள் நல அமைப்பின் அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணை விட்டு நிரந்தரமாக அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் கொடூரமாக கொல்லப்பட்டார்கள்.
மேற்படி சம்பவம் தொடர்பாக நீதி அரசர் அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையான நீதி விசாரனை ஆணையம் குற்றவாளிகளை அடையாளம் காட்டி அறிக்கையினை தமிழக முதல்வர் அவர்களிடம் கொடுத்து அதற்கு தமிழக முதல்வர் அவர்களும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தும் தற்போது வரை முழுமையாக நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது* .
இன்று மண்ணையும், சுற்றுசூழலையும் காக்க உயிர் நீத்த தியாகிகளின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு *பண்டாரம்பட்டி*, *மீளவிட்டன் பகுதிகளில் எம் தியாகிகளுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினோம் மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளான
1) தியாகிகளின் படுகொலைக்கு காரணமானவர்களுக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும்*
2)மண்னையும் ,சுற்றுசூழலையும் ,மக்களையும் பாதுகாக்க உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூறும் விதமாக பொதுமக்கள் ஓரிடத்தில் கூடி அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு ஏக்கர் இடம் ஒதுக்கி மணிமண்டபம் அணைத்திட வேண்டும்
3) மே 22 தினத்தில் மட்டும் தியாகிகளுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட வேண்டும்.
4) மே 22 அன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தூத்துக்குடி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
5)சுற்று சூழலியல் காத்த தியாகிகள் என அறிவித்து அரசு மே 22 நினைவு நினத்தில் மரியாதை செலுத்த வேண்டும்* .
6)ஸ்டெர்லைட் ஆலையை மண்ணைவிட்டு நிரந்தரமாக அகற்ற ஆக்கபூர்வ சட்ட நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும்* .
போன்ற கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கேட்டுக்கொள்கிறேன்.