விளாத்திகுளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்: எம் எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் நிதியுதவியுடன், விளாத்திகுளம் ஶ்ரீ சத்யசாய் சேவா சமிதி, ஸ்காட் நிர்மான் கிராம மேம்பாட்டு திட்டம்,மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் ரம்யா தட்டெழுத்து பயிற்சிப்பள்ளி ஆகியவை இணைந்து தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனையின் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ்,மருத்துவர் அனிதா,விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன்,விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி,தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன்,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி,ஸ்காட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜ் ரம்யா,தட்டெழுத்து பயிற்சி பள்ளி பூங்கொடி,முனைவர் சம்பத்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணகுமார்,ராமலிங்கம் மரங்கள் மக்கள் இயக்கம் சந்திரசேகர்,வார்டு செயலாளர்கள் கண்ணன்,ஸ்டாலின் கென்னடி,சிவசுப்பிரமணியன்,முத்துமாரியப்பன், சங்கரலிங்கம்,தமிழரசன், வெங்கடேஷ், மாரிராஜ்,வார்டு கவுன்சிலர்கள் குறிஞ்சி, சுப்புராஜ், கலைச்செல்வி செண்பகராஜ்,முன்னாள் வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி கமலாபுரம் மாரிச்சாமி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.