புதியம்புத்தூரில் முதல்வர் மருந்தகம் - சண்முகையா எம்எல்ஏ முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

புதியம்புத்தூரில் முதல்வர் மருந்தகம் - சண்முகையா எம்எல்ஏ முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் சந்தை விலையில் இருந்து 75% குறைவான விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகத்தை இன்று தமிழக முழுவதும் ஆயிரம் மருந்தகங்களை காணொளிகாட்சி வாயிலாக துவக்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதியம்புத்தூரில் கூட்டுறவு சங்கம் சார்பில் துவக்கப்பட்ட*முதல்வர் மருந்தகத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து முதல் மருந்து விற்பனையை துவக்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த் யூனியன், ஆணையாளர் சசிகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் சுடலைமணி லட்சுமிதேவி, கூட்டுறவு செயலர் கஸ்தூரி, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீரங்கபெருமாள்,ஊராட்சி செயலர் உத்திரக்கனி, ஒன்றிய கழக துணை செயலாளர் சிவன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காமராஜ்,ஒன்றிய வர்த்தக அணி காளியப்பன், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, நகர செயலாளர் லிங்கராஜ், நெசவாளரணி ஈசன் சுரேஷ்,புதியம்புத்தூர் கிளைச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், பாலகுருசாமி,ராஜாவின் கோவில் கிளை செயலாளர் சிவமுருகன்,இளைஞரணி பார்த்திபன்,மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.