மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் எம்எல்ஏ  சண்முகையா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதன்வாழ்வு, கொடியன்குளம், கீழக்கோட்டை, கலப்பைபட்டி மற்றும் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் அக்காநாயக்கன்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

முகாமில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா  கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா , விலை நிலங்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

மேலும் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரியிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இம்முகாமில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் வட்டாட்சியர்கள் சுரேஷ் செல்வகுமார் சுசிலா மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரி ஊராட்சி மன்ற தலைவர்கள் அருண்குமார் அய்யாதுரை சதீஷ்குமார் சண்முகசுந்தரி தங்கராஜ் ஒன்றிய மகளிரணி துணை அமைப்பாளர் ராமலட்சுமி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கணேசன் இளைஞரணி மகேஷ் ஆகாஷ் கிளைச் செயலாளர்கள் இளங்கோ கோமதி முருகன் இளையராஜா மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.