குலசேகரநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பங்கேற்பு.

குலசேகரநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பங்கேற்பு.

நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் ஆணைப்படி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குலசேகரநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா கலந்து கொண்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

மேலும் கிராமசபை கூட்டத்தில் கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு துறைசார்ந்த அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திலகா வேளாண்மை உதவி இயக்குநர் சிவகாமி பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஆறுமுகராஜ் மின்வாரிய உதவி பொறியாளர் மணிசேகர் வட்டார சுகாதார ஆய்வாளர் காளிமுத்து வட்டார மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் கிராம நிர்வாக அலுவலர் குருநாதன் ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன் பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி மாவட்ட பிரதிநிதி கண்ணன் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் கோபால் ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி ஒன்றிய கவுன்சிலர் திரு.மொட்டையைசாமி ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதசாமி ஊராட்சி செயலர் முருகேசன் கிளை செயலாளர்கள் சண்முகம் சிவன் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.