அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்ததை வரவேற்று - தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் என்பதை தேர்தல் கமிஷன் அங்கீகரித்ததை வரவேற்று - தூத்துக்குடியில் அதிமுகவினர்  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மாணங்களையும் அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை செய்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ் பி. சண்முகநாதன் அறிவுறுத்தலின்படி கழக அமைப்புச் செயலாளர் சின்னத்திரை தலைமையில் டூவிபுரம் மாவட்ட கழக அலுவலகம் அருகே பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 இந்த நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர்,அமைப்புச் சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி,  வழக்கறிஞர் அணி யு.எஸ்.சேகர்,அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, 39 வது வார்டு வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம்,இளைஞர் பாசறை ஜெ.தனராஜ்,சிறுபாண்மை பிரிவு கே.ஜே.பிரபாகர், பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், நட்டார்முத்து, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மதுரை மண்டல ஐடி விங் துணைச்செயலாளர் கவுன்சிலர் மந்திரமூர்த்தி, மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் வீரபாகு, வடக்கு பகுதி இளைஞரணி செயலாளர் டைகர் சிவா,மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.