தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு எம் பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடியில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு எம் பி கனிமொழி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி  மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வாங்கும் திறனுக்குகேற்ற வீடுகள் திட்டத்தின் கீழ் 55 கோடியே 29.03 லட்சம் மதிப்பில் 528 அடுக்குமாடி குடியிருப்புக்கு திமுக துணை பொது செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

மேலும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் பயனாளிகள் சுயமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை எம்பி கனிமொழி வழங்கினார்.

.நிகழ்ச்சியில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்,மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா,மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார்,ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி  ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து,திமுக இளைஞர் அணி ஆனந்த், ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கெளதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.