யுகாதி விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் - நாயுடு மகாஜன சங்கத் தலைவர் ராமசாமி நாயுடு தலைமையில் செயலாளர் மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முடிவு.

துாத்துக்குடியில் தெலுங்கு வருட பிறப்பு யுகாதி திருவிழாவை விமரிசையாக கொண் டாடுவது என்று நிர்வா கிகள் ஆலோசனை கூட் டத்தில் முடிவு செய்யப் பட்டது.
தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க நிர்வா கிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பால விநாயகர் கோவில் தெருவில் உள்ள சங்க அலுவலகத்தில் மேனேஜிங் டிரஸ்டி விவேகம் விவேகானந்தன் ஆலோசனையின் பேரில் தலைவர் ராமசாமி நாயுடு தலைமையில் நாயுடு மகாஜன சங்கத் செயளாலர் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கணக்கு குழு தலைவர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ரெங்கசாமி முன்னிலையில் நடைபெற்றது.
உதவி தலைவர் வக்கீல் நாகராஜபாபு வரவேற்று பேசினார்.
உதவி காரியதரிசி மோகன், பொருளாளர் ஆதிநாத ஆழ்வார், ஆகியோர் பேசினர்.
கணக்கர் அழகிரி நன்றி கூறினார்.
வரும் மார்ச் மாதம் 30ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு யுகாதி திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடு வது என்றும், அபிராமி மகாலில் இதனை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமண கலந் தாய்வு கூட்டம் நடத்துவது அதன் பிறகு , இரவு யுகாதி விழாவை விமரிசையாக கொண்டாடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.