அறியப்படாத அதிசய மனிதர்கள்! பாஸ்கர் மற்றும் மதிவதனிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!

சிறிய வயதில் தெய்வபக்தியை உள்வாங்கி பக்தி இசையை வெளிப்படுத்தும் அண்ணன் தங்கையான பாஸ்கர் மற்றும் மதிவதனி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அறியப்படாத அதிசய மனிதர்கள் தெய்வ பக்தி இன்னிசையை பாடும் தெய்வ குழந்தைகள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கையான பாஸ்கர் மற்றும் மதிவதனி ஆகியோர். இவர்கள் தங்களது ஐந்து வயது முதலே தேவாரம்,திருவாசகம்,திருப்புகழ்,கந்தர்,கலிவெண்பா,கந்தரநுபூதி, பாடல்களை கற்றுத் தேர்ந்து கோவில்களிலும் மேடைகளிலும் பாடி வருகின்றனர்.
இப்படி தங்களது ஐந்து வயதிலேயே குமரகுருபர சுவாமிகள் அருளிய கந்தர் கலிவெண்பாவை பாடி சிறப்பு பரிசுகளை பெற்றிருக்கிறார்கள். குழந்தை பருவத்திலிருந்தே இசையில் நாட்டமிருந்ததால் மதிப்பிற்குரிய இராஜேஸ்வரி சங்கரநாராயணன் அவர்களிடம் கர்நாடக சங்கீதம் பயின்று வருகிறார்கள். தூத்துக்குடி விகாச பள்ளியில் 8 ஆம் மாற்றும் 6 ஆம் வகுப்பு படித்து வரும் இவர்கள் இதுவரை பல இசை நிகழ்ச்சிகளிலும். கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தங்களின் பக்தி இசையை வழங்கியிருக்கிறார்கள்.
மேலும் பல்வேறு திருக்கோவில்களில் நடைபெறும் நவராத்திரி திருவிழா மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்களில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் . இவ்வளவு சிறிய வயதில் பக்தியை உள்வாங்கி பக்தி இசையை வெளிப்படுத்தும் அண்ணன் தங்கையான பாஸ்கர் மற்றும் மதிவதனி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த இரண்டு குழந்தைகளும் அதிமுக தூத்துக்குடி 39-வது வார்டு பகுதி செயலாளர் திருச்சிற்றம்பலத்தின் உடன் பிறந்த மூத்த சகோதரர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.