திருச்செந்தூர் தை பூச திருவிழா; இந்து மக்கள் கட்சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்.

திருச்செந்தூர் தை பூச திருவிழா; இந்து மக்கள் கட்சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்.

திருச்செந்தூரில் நடைபெற்று வரும் தை பூச திருவிழாவில் பாதயாத்திரையாக பல லட்சம் பக்தர்கள் வருகை தருகிறனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நன்கொடை மூலம் பெறப்பட்ட 1500 கிலோ அரிசி மற்றும் பலசரக்கு சாமான்களை கொண்டு நல்ல கை தேர்ந்த சமையல் கலைஞர்களைக் கொண்டு சாம்பார் சாதம், புளியோதரை, பொங்கல், தயிர் சாதம் என பலவகையான அன்னங்கள் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது.

திருச்செந்தூர் அருகேயுள்ள சண்முகபுரம் எல்லைப் பிள்ளையார்கோவிலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஐ.ரவி கிருஷ்ணன் அன்னதானத்தை துவக்கிவைத்தார்.

தூத்துக்குடி மார்க்கமாக பாதயாத்திரையாக வருகை தரும்பக்தர்கள் எல்லை பிள்ளையார்கோவில் முன்பு ஒன்றுகூடி மேளதாளத்துடன் குழுவாக ஆடிப்பாடி முருகன் பாடல்களைபாடுயபடி கோவிலுக்கு சென்றனர். அன்னதானதில் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாப்பிட்டு சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அனுமன் சேனா தலைவர் இ.தங்கராஜா, தெற்கு மாவட்டத் தலைவர் இசக்கிமுத்து, ஒன்றிய தலைவர் ராகேஷ், மாவட்டச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய அமைப்பாளர் சிவராஜ்,ஒன்றிய தலைவர் ஆறுமுகம், மாவட்ட துணைத்தலைவர் குமரகுருபரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.