தூத்துக்குடி திரேஸ்புரம் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்-முன்னாள் அமைச்சர் சி.த.செல்ல பாண்டியன் திறந்து வைத்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க பொதுமக்களை கோடைகால வெயிலில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஆங்காங்கே நீர் மோர் பந்தலை அமைக்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் 8 வது வார்டு அதிமுக நிர்வாகிகள் சகாயராஜ்,ஜெனோபர்,கிளமென்டஸ்,அசன்,சங்கர்,ஜேடி அம்மா, சார்பில் திரேஸ்புரம் மெயின் ரோட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், மோர்,தர்பூசணி மற்றும் பழவகைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் M.C.P ஜீவா பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி,முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி டி ஆர் ராஜகோபால்,மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் J.J.குமார்,மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர்D. ஞானபுஷ்பம்,வட்ட செயலாளர்கள்மில்லர் R L ராஜா,துரைசிங்,அரசு போக்குவரத்து கழக முன்னாள் மண்டல இணை செயலாளர் சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,வட்ட பிரதிநிதி மணிகண்டன், கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.