தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் -அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதிக்கு 50 புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் -அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தொகுதிக்கு 50 புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு!.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் -அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிதாக திமுகவில் தொகுதிக்கு 50 ஆயிரம் பேரை சேர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தவாறு தூத்துக்குடியில் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி விளாத்திகுளம் கோவில்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் தொகுதிக்கு 50,000 புதிய உறுப்பினர் என்ற கணக்கின் படி ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேரை புதிதாக சேர்ப்பது எனவும் இந்த பணிகளை முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதிக்குள் நிறைவு செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பிறந்த நாளை முன்னிட்டு இந்த வருடம் முழுவதும் சிறப்பாக மாவட்டம் முழுவதும் நலத்திட்ட வழங்கி கொண்டாடுவது எனவும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய அமைச்சர் கீதா ஜீவன் வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் எனவும் மேலும் கிராமம் தோறும் முகாம்கள் போட்டும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன்,தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பார்வையாளராக நியமிக்கப்பட்ட திமுக தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி,நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணைச் செயலாளர் ஜோசப் ராஜ்,மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஜெயக்குமார்,மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஃப்ளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், அவைத் தலைவர் செல்வராஜ்,மண்டல தலைவர் கலைச்செல்வி,முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம்,மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், மகேஸ்வரன் சிங்நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.C ஜெயக்குமார் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்  கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர்  நவநீதகண்ணன் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி  புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதுபாண்டியன் எட்டையாபுரம் பேரூர் கழகச் செயலாளர்  பாரதிகணேசன் பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மிக்கேல்நவமணி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் தவனிதாஅழகுராஜ் உட்பட மாவட்ட பிரதிநிதிகள்,  மற்றும் மகளிர் அணியினர் நகர ஒன்றிய வட்ட கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.