தூத்துக்குடி மாநகராட்சி மண்டல கலந்தாய்வு கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் அந்த அந்த மண்டல அலுவலகத்தில் வைத்து மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வார்டுகளில் நடைபெறும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், வார்டுகளில் புதியதாக அமைக்கப்படும் மின் விளக்குகளின் பட்டியல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சேகர் ராமச்சந்திரன்,மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி பால குருசாமி,மாமன்ற உறுப்பினர்கள் சரவணகுமார்,ராஜேந்திரன், வைதேகி, முத்துவேல் பச்சி ராஜ், சுயம்புலிங்கம்,இசக்கி ராஜா, கனகராஜ்,பொன்னையன்,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்,மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உதவியாளர் பிரபாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.