முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழா - முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க.ஸ்டாலின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகியோரது ஆலோசனையின்படியும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும் ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான உயர்திரு எம் சி.சண்முகையா வழிகாட்டுதலின்படி ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் புதியம்புத்தூரில் ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் திமுகவின் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தரமாட்டோம்தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம். தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! - இதுதான் ஒரே இலக்குஎன்ற முழக்கத்துடன் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் ஜோசப், மோகன்,தங்ககுமார், ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவன், வர்த்தக அணி முத்துக்குமார், மாணவரணி தங்கதுரை பாண்டியன்,நகரச் செயலாளர் லிங்கராஜ்,மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி,மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் தங்கவேல்சாமி, மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஞானதுரை, நெசவாளர் அணி ஈசன் சுரேஷ்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார்,ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நல்லமுத்து,புதியம்புத்தூர் கிளைச் செயலாளர் சற்குணபாண்டியன், பாலகுருசாமி, பூவலிங்கம், ஒன்றிய ஆதிதிராவிடர் அணி கருப்பசாமி, ஒன்றிய வர்த்தக அணி காளியப்பன்,ஒன்றிய தொழிலாளர் அணி அமைப்பாளர் கருப்பசாமி,இளைஞரணி பார்த்திபன், மகளிரணி வசந்தி, பாக்கியலட்சுமி, மகாலட்சுமி,கழகம் முன்னோடிகள் சரவணன், சுப்பையா,மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.