தூத்துக்குடி மாநகரம் போல் பேட்டை பகுதி பொது உறுப்பினர் கூட்டம் - அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரம் போல் பேட்டை பகுதி பொது உறுப்பினர் கூட்டம் - அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில், மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக வடக்கு மாவட்டச் செயலாளா் அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி வாரியாக கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெறும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் தான் வெளியிட்டு இருந்த அறிக்கையில் தகவல் தெரிவித்திருந்தார்.

அதன்படி இரு தினங்களாக கோவில்பட்டி, கயத்தாறு என இரு இடங்களில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (31.08.2024) கலைஞர் அரங்கத்தில் போல் பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பொது உறுப்பினர் கூட்டமானது அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அவைத் தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கழக பேச்சாளர் சரத் பாலா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், வட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள், வட்ட பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், மற்றும் போல் பேட்டை பகுதி கழக உறுப்பினர்கள், என பலர் கலந்து கொண்டனர்.