தூத்துக்குடி மாநகராட்சி கதிர்வேல் நகரப்பகுதியில் தார் சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க ஆணையரிடம் கோரிக்கை.

தூத்துக்குடி மாநகராட்சி கதிர்வேல் நகர் பகுதியில் வசிக்கும் A.P. சிவன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்த கோரிக்கையில் நாங்கள் வசிக்கும் கதிர்வேல் நகர் 4 வது தெரு குறுக்குச் சந்து பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாமல் உள்ளதால் மாநகராட்சி வாகனங்கள் மூலமாகவே கழிவுநீர் அகற்றப்பட்டு வருகின்றது . 

சமீப காலமாக நாங்கள் பலமுறை கழிவுநீர் அகற்றும் பணியாளர் பாலுவிடமும் மற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் போனிலும் , நேரிலும் பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரையிலும் கழிவுநீர் அகற்றப்படாமல் அலைகழித்து வருகின்றனர் . 

மேலும் ராஜீவ் நகர் மற்றும் கதிர்வேல்நகர் போன்ற பகுதிகளில் சமீபத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது . அத்துடன் வெகுநாட்களாக கழிவுநீர் அகற்றப்படாமலும் இந்த பகுதி பள்ளமாக இருப்பதினால் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதோடு துர்நாற்றம் வீசியும் , சுகாதார கேடு விளைவிக்கும் வகையில் இருக்கிறது . 

எனவே ஆணையர் அவர்கள் இதை கவனத்தில் கொண்டு எங்கள் பகுதியில் கழிவுநீர் அகற்றப்பட்டு தார்சாலை அமைத்து தந்திடவும் , மேலும் மழை காலம் துவங்கப்படுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார் .