தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சூறாவளி பிரச்சாரம் - செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு!.

தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி சூறாவளி பிரச்சாரம் - செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு!.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளராக அதிமுக சார்பில் போட்டியிடும் பண்டாரவிளை வைத்தியர் சிவசாமி வேலுமணி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய நாளிலிருந்து செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் பேராதரவுடன் வெற்றிப்பாதையை நோக்கி செல்லும் அளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் நேற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கயத்தார் கடம்பூர் அகிலாண்டபுரம் சொக்கலிங்கபுரம் தொட்டம்பட்டி கழுகுமலை ஆகிய பகுதிகளில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் போகும் இடமெல்லாம் தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் தனது பிரச்சன பயணத்தை மேற்கொண்டார் அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து சால்வை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர் பொது மக்களிடம் பேசுகையில்;

அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் உங்களுக்காக பணி செய்ய உள்ளூர் வேட்பாளராக எனக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் மக்களை பாதுகாத்தது எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் சிறப்பாக கொரோனா காலத்தை கையாண்ட அரசு எடப்பாடி அரசுதான் என பாரத பிரதமர் அவர்களே பாராட்டும் அளவிற்கு அன்றைய முதல்வர் எடப்பாடி தான் செயல்பட்டார் இன்றைக்கு ஆட்சி செய்யும் திமுக அரசு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சி கட்டில் அமர்ந்துள்ளது அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்த நீட் தேர்வுக்கு கல்வி கடன் ரத்து விவசாய கடன் ரத்து என எதையும் செய்யாத அரசு தான் இந்த திமுக அரசு எனவே திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்ட வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யும் பட்சத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை வளர்ச்சியில் தமிழகத்தின் முன்னணி மாவட்டமாக கொண்டு வர பாடுபடுவேன் என்று உறுதி அளித்தார்.

தூத்துக்குடி மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு பெருகிக்கொண்டே இருப்பது வேட்பாளரை உற்சாகத்தில் ஏற்படுத்தியுள்ளது.