தூத்துக்குடி மறைந்த திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்பரசனின் 47 வது பிறந்தநாள் விழா - கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி 50 வது வார்டு மறைந்த திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அன்பரசனின் 47 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கணேசன் காலனி முதல் தெரு பகுதியில் 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி கணேசன் காலனி 1வது தெரு பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்பரசனின் புகைப்படத்திற்கு 50 வது வார்டு கவுன்சிலர் சரவணகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மணிகண்டன்,செந்தில் குமார்,சிங்கராஜ்,சிவசங்கர்,ராஜேஷ், இசக்கிராஜா, முருகேஷ்,கெளதம் குமார் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.