திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா;லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா;லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா இன்று வெகுவிமர்ச்சையாக நடைபெற்றது.

அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். கோவில் கடற்கரை கோவில் வளாகம், கிரிவீதி வளாகம், மற்றும், அனைத்து சமுதாய மடங்கள். தங்கும் விடுதிகள் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. நகர வீதிகளில் பக்தர்கள் முருகன் பாடல்களை மேளதாளத்துடன் ஆடிப்பாடி வந்தனர். அதிகப்படியான பக்தர்கள் ஒரு அடி வேல் முதல் 20 அடி வேல்வரை அலகு குத்தி வந்து நேர்ச்சை செய்தனர்.

ஞானமான பக்தர்கள் கிரிப்பிராகத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். அதிகமான பெண்கள் குழந்தை வரம் வேண்டியும்.திருமணத் தடை அகலவும் அடிப்பிரச்சனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்காக முடிகாணிக்கை செலுத்தினார்கள். ஏராளமான பக்தர்கள் பல்வேறு வகையில் நேர்த்திக் காணிக்கைகளை செய்தனர். 

இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்றும் தீபாராதனை  நடைபெற்றது. பின்பு தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கார்த்திக், அறங்கவலர் குழுத் தலைவர் அருள்முருகன், மற்றும் அறங்காவலர்கள், மனேஜர் சிவநாதன் ஆகியோர் செய்து இருந்தனர்.

பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து சென்றனர்.